Thursday 25th of April 2024 12:36:19 AM GMT

LANGUAGE - TAMIL
-
விறு-விறுவென அதிகரிக்கும் கொரோனா தொற்றால்  கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் ஐரோப்பிய நாடுகள்!

விறு-விறுவென அதிகரிக்கும் கொரோனா தொற்றால் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் ஐரோப்பிய நாடுகள்!


ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று நோய் விரைவாக அதிகரித்து வரும் நிலையில் பல நாடுகள் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி வருகின்றன.

ஜேர்மனி

ஜேர்மனியில் நேற்று புதன்கிழமையன்று புதிதாக 52 ஆயிரத்து 826 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நாடு நான்காவது அலையின் மோசமான பிடியில் சிக்கியுள்ளதாக சான்சலர் ஏங்கலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

கொரோனா நெருக்கடி குறித்த பிராந்திய தலைவர்களுடனான சந்திப்பில் ஏங்கலா மெர்கல் இவ்வாறு கூறினார்.

பெல்ஜியம்

இதேவேளை, பெல்ஜியத்திலும் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்கும் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா குறித்து வரும் எச்சரிக்கை சமிக்ஞைகள் தீவிரமாக உள்ளன என பெல்ஜியம் பிரதமர் அலெக்ஸாண்டர் டெ க்ரூ தெரிவித்துள்ளார்.

பெல்ஜியத்தில்12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் மட்டுமே முகக்கவசம் அணிய வேண்டும் என்றிருந்த நிலையில் தற்போது 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சனிக்கிழமையிலிருந்து ஒரு மாத காலத்திற்கு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவது கட்டாயமாக்கப்படுவதாக பெல்ஜியம் அரசு அறிவித்துள்ளது.

ஆஸ்திரியா

மேலும் ஆஸ்திரியாவிலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்கு தடுப்பூசி போடாத சுமார் 20 லட்சம் மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர வீடுகளை விட்டு வெளியேற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெதர்லாந்து

நெதர்லாந்திலும் இதுவரை இல்லாதளவு தொற்று நோயாளர்கள் அதிகளவு பதிவான நிலையில் அங்கு பகுதி அளவிலான முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடன்

ஸ்வீடனில் தொற்று நோய் அதிகரித்ததை அடுத்து 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் கச்சேரிகள் மற்றும் பிற உட்புற நிகழ்வுகளில் பங்கேற்போருக்கு தடுப்பூசி அட்டை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 1 முதல் இந்த நடவடிக்கை அமுலுக்கு வருகிறது.

செக் குடியரசு

செக் குடியரசில் கொவிட் 19 தடுப்பூசி பெறாத எவரும் பொது நிகழ்வுகள் அல்லது சேவைகளை அணுக தடை விதிக்கப்படும் என செக் குடியரசின் பிரதமர் ஆண்ட்ரேஜ் பாபிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்லோவாக்கியா

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவாக்கியாவில் நேற்று புதன்கிழமை 8,342 தொற்று நோயாளர்கள் பதிவாகினர். இங்கு பணியிடங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற வணிக நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்ட ஊழியர்கள் பணியில் இருக்க தடை விதிக்கப்படும் என பிரதமர் எட்வார்ட் ஹெகர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ்

இதேவேளை, பிரான்ஸில் ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக நேற்று புதன்கிழமை 20,000 க்கும் மேற்பட்ட புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் கேப்ரியல் அட்டலின் உறுதி செய்தார்.

எனினும் கட்டாய தடுப்பூசி பாஸ் நடைமுறையைத் தாண்டி பாரிய கட்டுப்பாடுகளை பிரான்ஸ் இதுவரை விதிக்கவில்லை.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE