இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு குழாம் உறுப்பினர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி, இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில், கொவிட்-19 தொற்றுறுதியான இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு குழாம் உறுப்பினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அனைத்து வீரர்களுக்கும் கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை