Friday 19th of April 2024 03:55:52 AM GMT

LANGUAGE - TAMIL
-
கட்டுப்படுத்த முடியாத வேகம்! கிளிநொச்சியில் மற்றொரு விபத்து - இருவர் படுகாயம்!

கட்டுப்படுத்த முடியாத வேகம்! கிளிநொச்சியில் மற்றொரு விபத்து - இருவர் படுகாயம்!


கிளிநொச்சி டிப்போ சந்தியில் இன்று பகல் இடத்பெற்ற விபத்து சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பரந்தன் திசையிலிருந்து கிளிநொச்சி நகருக்குள் நுழைந்த கன்டர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிலையத்தில் தரித்திருந்த முச்சக்கரவண்டி மற்றும் காருடன் மோதியுள்ளது.

இதன்போது விபத்தில் சிக்குண்ட இருவர் காயமடைந்த நிலயைில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.

இதன்போது மோதிய கன்டர் வாகனம் பகுதியளவில் சேதமடைந்ததுடன், முச்சக்கரவண்டி மற்றும் கார் ஆகியனவும் சேதமடைந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை கடந்த 15ம் திகதி விபத்த இடம்பெற்ற பகுதியை அண்மித்துள்ள கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம் முன்பாக பாதசாரி கடவையில் இவ்வாறானதொரு விபத்தின்போது பாடசாலை மாணவ ஒருவர் உயிரிழந்திருந்ததுடன், மற்றுமொரு மாணவி படுகாயமடைந்திருந்தார்.

அதிகரித்த வேகம், நெரிசல் காரணமாக இவ்வாறான விபத்துக்கள் கிளிநொச்சியில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE