அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் கிறிஸ்துமஸ் அணிவகுப்பொன்றின்போது மக்கள் கூட்டத்துக்குள் தாறுமாறாக ஓடிய வாகனம் மோதியதில் 5 பேர் உயிரிழந்தமை உறுதிசெய்யப்பட்டது. அத்துடன் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க நேரப்படி மாலை 4:30 மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்ததாக விஸ்கான்சின் மாகாண பொலிஸ் தலைவர் டான் தோம்சன் செய்தியாளர்களிடம் கூறினார்.
கூட்டத்துக்கு புகுந்து மோதித் தள்ளிய சிவப்பு நிற SUV கார் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் விஸ்கான்சின் மாகாண பொலிஸ் தலைவர் டான் தோம்சன் குறிப்பிட்டார்.