காலியில் ஆரம்பமாகி நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாது மேற்கிந்திய தீவுகள் அணி தடுமாறி வருகிறது.
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் ஆரம்பமாகியது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
அணித்தலைவர் திமுத் கருணாரத்னேவின் சிறப்பான சதத்தின் உதவியுடன் இலங்கை அணி தனது முதல் இனிங்சுக்காக 386 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தது.தொடர்ந்து தனது முதலாவது இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 6 விக்கெட் இழப்பிற்கு 113 ஓட்டங்களை பெற்று தடுமாறி வருகிறது.
அந்த அணி சார்பில் அதிகபட்சமாக பிராத்வெய்ட்-41, பிளாக் வூட்-20 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்த நிலையில் கைல் மேஜர் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது உள்ளார்.
பந்துவீச்சில் ரமேஷ் மென்டிஸ் -3, பிரவீன் ஜெயவிக்கரம -2, எம்புல்தெனிய - ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.
இலங்கை அணியின் முதலாவது இனிங்ஸ் ஒட்டத்தைவிட 273 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இன்று 3வது நாள் ஆட்டத்தை மேற்கிந்திய தீவுகள் அணி தொடர உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை