Thursday 25th of April 2024 10:28:19 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஐரோப்பாவில் 2022 மார்ச்சுக்குள் மேலும் 7 இலட்சம்  கொரோனா மரணங்கள் பதிவாகலாம் என எச்சரிக்கை!

ஐரோப்பாவில் 2022 மார்ச்சுக்குள் மேலும் 7 இலட்சம் கொரோனா மரணங்கள் பதிவாகலாம் என எச்சரிக்கை!


ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு மேலும் 7 இலட்சம் கொரோனா மரணங்கள் பதிவாகக் கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு 53 நாடுகளை ஐரோப்பிய பிராந்தியமாக வகைப்படுத்தியுள்ளது. அப்பிராந்தியத்தில் ஏற்கனவே 15 இலட்சம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் 2022மார்ச் மாதத்துக்குள் 52 நாடுகளில் 49 நாடுகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகக்கடுமையான அல்லது மோசமான அழுத்தத்தை எதிர்கொள்ளலாம் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான மக்களின் நோயெதிா்ப்புத் திறன் குறைந்து வருவதற்கான ஆதாரங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அதனைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதன் ஒரு பகுதியாக இன்னும் அதிகமானவா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மூன்றாவது தடுப்பூசி போட தகுதி இருந்தால் அதை போட்டுக் கொள்வது நல்லது எனவும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

ஐரோப்பாவிலும் மத்திய ஆசியாவிலும் கொரோனா தொற்று நோய் நெருக்கடி நிலை மிக மோசமாக உள்ளது. மேலும் பிராந்தியம் குளிா்காலத்தை எதிா்நோக்கியுள்ளது. இது கொரோனா பரவல் அபாயத்தை அதிகரிக்கும். எனவே, நாம் சுகாதாரப் பணியாளா்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய பணிப்பாளர் ஹன்ஸ் கிளக் தெரிவித்துள்ளார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE