மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி பக்கம் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதலாவது டெஸ்ட்டின் 2வது இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியிருந்தது.
அணித் தலைவர் திமுத் கருணாரத்னே -83 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்த நிலையில் அனுபவவீரர் ஏஞ்சலோ மத்தியூஸ் - 69 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றிருந்தார்.
இதையடுத்து முதல் இனிங்ஸ் முன்னிலையுடன் சேர்த்து 348 ஓட்டங்கள் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.348 என்ற இலக்கு நோக்கி தனது 2வது இனிங்சை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கை வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவாக ஆட்மிழந்து வெளியேறினர்.
இன்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 25.3 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 52 ஓட்டங்களை மட்டுமே பெற்றுள்ளது.
ரமேஷ் மென்டிஸ் 4, எம்புல்தெனிய 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளனர்.
போட்டியின் இறுதி நாளாகிய நாளை ஆட்டத்தில் 296 ஓட்டங்களை பெற்றாக வேண்டிய நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியும், மழை இடையூறு இல்லாத பட்சத்தில் எஞ்சிய 4 விக்கெட்களை வீழ்த்தி வெற்றி பெற்றுவிடும் முனைப்பில் இலங்கை அணியும் உள்ளன.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை