Friday 29th of March 2024 06:14:04 AM GMT

LANGUAGE - TAMIL
-
வவுனியா, நெளுக்குளம் - செட்டிக்குளம் வீதி தற்காலிகமாக மூடப்படுவது தொடர்பில் அவசர அறிவித்தல்!

வவுனியா, நெளுக்குளம் - செட்டிக்குளம் வீதி தற்காலிகமாக மூடப்படுவது தொடர்பில் அவசர அறிவித்தல்!


வவுனியா, நெளுக்குளம் - செட்டிகுளம் பிரதான வீதியானது இன்று (25) இரவு 9 மணி தொடக்கம் நாளை (26) அதிகாலை 5 மணிவரை மூடப்படும் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் தொடர்ந்தும் பெய்து வரும் மழை காரணமாக பாவற்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து உள்ளமையால் இன்று (25.11) இரவு அதன் வான்கதவுகள் மேலும் ஆழத்திற்கு திறக்கப்படவுள்ளது.

இதன்காரணமக நெளுக்குளம் - செட்டிகுளம் வீதியில் நீர்வரத்து அதிகரித்து வீதியில் பயணிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறித்த வீதியானது இரவு 9 மணியில் இருந்து நாளை அதிகாலை 5 மணிவரை மூடப்பட்டிருக்கும். எனவே பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE