Saturday 20th of April 2024 03:37:30 AM GMT

LANGUAGE - TAMIL
.
தீர்வு கிடைக்கும்வரை தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் - CEB பொறியியலாளர் சங்கம்!

தீர்வு கிடைக்கும்வரை தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் - CEB பொறியியலாளர் சங்கம்!


தாம் முதற்கட்ட நடவடிக்கையையே ஆரம்பித்துள்ளதாகவும் மேலும் இரண்டு வழிமுறைகள் தங்களது சங்கத்தால் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் 'சட்டப்படி வேலை செய்யும்' தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.

அரசாங்கத்திற்கு சொந்தமான யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கும் உடன்படிக்கைக்கு எதிராகவும், மின்சார சபையில் நிலவும் பிரச்சினைகளை முன்னிறுத்தியும் இந்த 'சட்டப்படி வேலை செய்யும்' போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

நேற்று(25) நண்பகல் முதல் இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கபெறும் வரையில் இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE