இந்தியா - மியன்மார் எல்லையில் பாரிய நில நடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.
இந்தியாவின் திரிபுரா, மணிப்பூர், மிசோரம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொல்கத்தா மற்றும் பங்களாதேஷின் சிட்டகொங் ஆகிய தூரப்பகுதிகளிலுள்ள நகரங்களிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதனால் ஏற்பட்ட தேசங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.