கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் வாழும் மக்களை அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.
இது குறித்து குறித்த அமைப்பு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இரணைமடு குளத்தின் நீர்மட்டம் தற்போது அதிகரித்து வருவதனால் தொடர்ச்சியாக மழை பெய்யும் ஆக இருந்தால் வான் கதவுகள் திறக்கப்படும்.
எனவே இரணைமடுக் குளத்தில் கீழ் பகுதிகளில் வாழும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிலவரம் தொடர்பிலான தகவல்கள் அருவி இணையம் ஊடாக உடனுக்குடன் அறியத்தரப்படும்.
Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், கிளிநொச்சி