Friday 19th of April 2024 06:41:48 AM GMT

LANGUAGE - TAMIL
-
அறிகுறிகள் இன்றி சமூகத்தில் நோய் தொற்றை பரப்பக்கூடியவர்கள் இருக்ககூடும் - சுகாதார பிரிவு எச்சரிக்கை!

அறிகுறிகள் இன்றி சமூகத்தில் நோய் தொற்றை பரப்பக்கூடியவர்கள் இருக்ககூடும் - சுகாதார பிரிவு எச்சரிக்கை!


கொரோனா நோய் அறிகுறிகள் இன்றி சமூகத்தில் நோய் தொற்றை பரப்பக்கூடியவர்கள் இருக்கலாம் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்.

"சுகாதார பிரிவினால் தினசரி 5,000 க்கும் அதிகமான PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் நாடு பூராகவும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதும் நோய்த் தொற்றுக்குள்ளான பின்னரே எமக்கு தெரிய வருகின்றது. நாம் அதை எதிர்ப்பாக்கவில்லை. நோய்த் தொற்று ஏற்படாதவாறு நாம் இருக்க வேண்டும். அதற்காக சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இத்தருணத்தில் தடுப்பூசி பாதுகாப்புடன் நோய் அறிகுறிகள் இன்றி நோயை பரப்பக்கூடிய பலர் நம்மிடத்தில் இருக்கக்கூடும். இதன் காரணமாக நாம் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மரண எண்ணிக்கை அதிகரிப்பு நோயாளர்களின் குறைவின்மையை காட்டுகிறது. என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE