இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்று 03 மாதங்கள் பூர்த்தியான 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நடமாடும் சேவை மூலம் மூன்றாவது தடுப்பூசியை வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இன்று இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்று ஒரு மாதம் பூர்த்தியான 20 வயதுக்கு மேற்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் மூன்றாவது கொரோனா தடுப்பூசி செலுத்துமாறும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை