Friday 29th of March 2024 09:47:53 AM GMT

LANGUAGE - TAMIL
-
தொடர் மழையால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 189 பேருக்கு பாதிப்பு!

தொடர் மழையால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 189 பேருக்கு பாதிப்பு!


முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக ஏ 70 குடும்பங்களைச் சேர்ந்த 189 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று மாலை குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 5குடும்பங்களைச் சேர்ந்த 19அங்கத்தவர்களும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 18குடும்பங்களைச் சேர்ந்த அங்கத்தவர்கள் 34 பேரும், வெலிஓயா கிராம சேவகர் பிரிவில் 9குடும்பங்களைச் சேர்ந்த 18நபர்களும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரு நபர்களும், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 37குடும்பத்தைச் சேர்ந்த 116 அங்கத்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த அங்கத்தவர்கள் 14 பேர், ஆனந்தபுரம் கிராம அலுவலர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகமாக இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று முன்தினம்(24) மன்னாகண்டல் பகுதியில் யானைத் தாக்குதலால் மரணம் ஒன்றும் பதிவாகியுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட பகுதியினை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் சேத விபரங்கள் தொடர்பில் களஆய்வில் ஈடுபட்டு மதிப்பீடுகள் அமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE