Thursday 25th of April 2024 08:00:10 AM GMT

LANGUAGE - TAMIL
.
திருமலையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

திருமலையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!


திருகோணமலை – தோப்பூர் பிரதேசத்தில் ரி - 56 ரக துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

கந்தளாய் – சூரியபுர பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த சந்தேகநபர் துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE