Saturday 20th of April 2024 05:04:52 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையில் மேலும் 488 பேருக்கு கொரோனாத் தொற்றுறுதி!

இலங்கையில் மேலும் 488 பேருக்கு கொரோனாத் தொற்றுறுதி!


இலங்கையில் மேலும் 488 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 560,833 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 406 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 528,806 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து தற்போது சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 17,795 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE