Tuesday 23rd of April 2024 09:19:37 PM GMT

LANGUAGE - TAMIL
.
யாழ். கோட்டை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் அதிகாலையில் அடித்துடைப்பு! - ஒருவர் கைது!

யாழ். கோட்டை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் அதிகாலையில் அடித்துடைப்பு! - ஒருவர் கைது!


யாழப்பாணம் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் இன்று அதிகாலையில் அடித்து உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட் கிழமை அதிகாலையில் 3.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இன்று அதிகாலை 3.30 மணியளவில் குறித்த கிறிஸ்தவ தேவாலயத்திற்குற் நுழைந்த நபரினால் அடித்துடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள குறித்த தேவாலயத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணை நடத்தியதோடு குறித்த தாக்குதலை நடாத்திய கொட்டடி பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர் மது போதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்

தாக்குதலின் பிண்ணனிதொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE