Friday 29th of March 2024 03:01:08 AM GMT

LANGUAGE - TAMIL
-
கிளிநொச்சியில் மகளிடம் சேட்டை விட்டவருக்கு காதறுப்பு; சந்தேக நபர் கைது!

கிளிநொச்சியில் மகளிடம் சேட்டை விட்டவருக்கு காதறுப்பு; சந்தேக நபர் கைது!


மகளிடம் சேட்டை விட்டவருக்கு காதறுத்த சம்பவம் பதிவாகியுள்ளது. கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட தருமபுரம் பகுதியில் நேற்றையதினம்(28) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் உறவினர்கள் இல்லாத சமயத்தில் 12 வயது மதிக்கத்தக்க மகளிடம் சேட்டை புரிந்தவரின் காது அறுக்கப்பட்டுள்ளதுடன், கை மற்றும் கால் போன்ற இடங்களில் பலமாக வெட்டப்பட்ட நிலையில் தருமபுரம் வைத்தியசாலை கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை தருமபுரம் பொலிசார் கைது செய்துள்ளனர். அத்துடன் வெட்டப்பட்ட வாள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன்,

இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசார் மேலதிக விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE