மின்வெட்டு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த விவாதத்தில் சபாநாயகர் மற்றும் அவைத்தலைவர் அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோரும் தலையிட்டனர்.