Thursday 18th of April 2024 08:43:37 PM GMT

LANGUAGE - TAMIL
-
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 17,167 ஏக்கர் நெற்பயிர்ச் செய்கை முழுமையாக பாதிப்பு!

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 17,167 ஏக்கர் நெற்பயிர்ச் செய்கை முழுமையாக பாதிப்பு!


மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக 2021 ஆம் 2022 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச் செய்கையில் சுமார் 17,167 ஏக்கர் நெற்பயிர்ச் செய்கை முழுமையாக அழிவடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட கமநல திணைக்களத்தின் உதவி ஆணையாளர் ஏ.மெரின் குமார் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 5555 ஏக்கர், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் 2400 ஏக்கர், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 4345 ஏக்கர் , மடு பிரதேச செயலாளர் பிரிவில் 825 ஏக்கர் மற்றும் மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் 4042 ஏக்கர் நெற் செய்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தற்போது வரை 17,167 ஏக்கர் வயல் நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE