வவுனியாவில் உயிரிழந்த நபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று (நவ-29) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் 14 இலக்க வாட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்திருந்த சர்வேஸ்வரன் என்ற ஆண் ஒருவருக்கே கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், வவுனியா