பிறந்து 4 நாட்களேயான பச்சிளம் ஆண் குழந்தை உட்பட வடக்கில் மேலும் 7 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று (நவ-29) 174 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்,
யாழ். போதனா வைத்தியசாலையில் - 03 பேருக்கு (15 வயது சிறுமி, 43 மற்றும் 68 வயது ஆண்கள்)பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் - ஒருவர் (பிறந்து 4 நாட்களேயான குழந்தை)
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் - ஒருவர் (47 வயது பெண்)
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் - ஒருவர் (ஆண்)
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் - ஒருவர் (உயிரிழந்த நபர்)
இவ்வாற மேலும் 7 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், பருத்தித்துறை, வவுனியா