Thursday 28th of March 2024 11:40:30 PM GMT

LANGUAGE - TAMIL
-
மைக்கல் கொலின் எழுதிய இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன!

மைக்கல் கொலின் எழுதிய இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன!


மட்டக்களப்பின் பிரபல எழுத்தாளர் மைக்கல் கொலின் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.

சிறப்பு அதிதியாக கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் இரா.நெடுஞ்செழியன், கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் டாக்டர் எஸ்.சிவச்செல்வன், மட்டக்களப்பு தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் முகாமையாளர் வி.சுவேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

எழுத்தாளர் மைக்கல்கொலினால் எழுதப்பட்ட ‘இவனை சிலுவையில் அறையுங்கள்’, ‘எழுதித்தீரா பிரியங்கள்’ ஆகிய இரண்டு நூல்கள் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டன.நூல்வெளியீட்டின் முதல் பிரதியினை சமூக சேவையாளரும் மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் தலைவருமான சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி பெற்றுக்கொண்டார்.

நூல்வெளியீட்டை தொடர்ந்து நூல் நயவுரையினை பேராசிரியர் செ.யோகராஜா,கவிஞை திருமதி சுதாகரி மணிவண்ணன் ஆகியோர் நிகழ்த்தியதுடன் கதிரவன் பட்டிமன்றக்குழுவினரால் எழுத்தாளர் கவிவாழ்த்துப்பா வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வில் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE