Friday 29th of March 2024 06:44:28 AM GMT

LANGUAGE - TAMIL
.
ரமேஷ் மெண்டிஸ் 6 விக்கெட் வீழ்த்தி அபாரம்; 2வது இனிங்ஸில் தடுமாறும் இலங்கை அணி!

ரமேஷ் மெண்டிஸ் 6 விக்கெட் வீழ்த்தி அபாரம்; 2வது இனிங்ஸில் தடுமாறும் இலங்கை அணி!


சுற்றுலா மேற்கிந்திய தீவுக்ள அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இனிங்ஸில் இலங்கை அணியின் பந்து வீச்சாளர் ரமேஷ் மெண்டிஸ் 6 விக்கெட்களை வீழ்த்தி அபாரமான திறமையினை வெளிப்படுத்தியுள்ளார்.

காலி மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியின் முதல் நாள் நிறைவின் போது 34.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 113 ஓட்டங்கள் பெற்றிருந்தது.

நேற்றைய 2ம் நாள் ஆட்டத்தின் போது மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் இலங்கை அணி வீரர்களுக்கு அதிர்ச்சியளித்தனர்.

ஒரு விக்கெட் இழப்பிற்கு 113 என்ற வலுவான நிலையில் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாது அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதையடுத்து 61.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 204 ஓட்டங்களை மட்டுமே இலங்கை அணி பெற்றது.

அதிகபட்சமாக பதும் நிஷங்க - 73, கருணாரத்னே - 42 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தனர்.

இலங்கை அணியின் 4 வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறியிருந்தமையே மிகக் குறைவான ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க காரணமாகும்.

பந்துவீச்சில் வீரசாமி பெருமாள் 13 ஓவர்கள் பந்து வீசி 35 ஓட்டங்களை மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுக்களையும், ஜோமெல் வார்ரிகன் 18.3 ஓவர்களில் 50 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

பதிலுக்கு முதலாவது இனிங்ஸை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ரமேஷ் மெண்டிஸ் சவாலாக விளங்கினார்.

104.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 253 ஓட்டங்களை பெற்றிருந்தது மேற்கிந்தி தீவுகள் அணி.

அதிகபட்சமாக பிராத் வெய்ட் - 72, பிளாக்வூட் - 44 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில், சிறப்பாக பந்துவீசிய ரமேஷ் மெண்டிஸ் 34.2 ஓவர்களில் 70 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். எம்புல்தெனிய மற்றும் ஜெயவிக்கிரம ஆகியோர் தலா இரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தனர்.

இதையடுத்து 49 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது 2வது இனிங்ஸை தொடங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

அணித் தலைவர் திமுத் கருணாரத்னே மற்றும் ஒஷாட் பெர்ணான்டோ ஆகியோர் தலா 6, 14 ஓட்டங்கைள பெற்றிருந்த நிலையில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

நேற்றைய 3ம் நாள் நிறைவின் போது 21 ஓர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 46 ஓட்டங்களை பெற்று இலங்கை அணி தடுமாற்றமான நிலையில் உள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியை விட இன்னும் 3 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இன்று 4வது நாள் ஆட்டத்தை இலங்கை அணி தொட உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE