இந்தியா - தமிழகத்தை சேர்ந்த ஆனந்தகுமார் பரமசிவம் என்பவருடைய சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்று வடமராட்சிகிழக்கு வத்திராயன் கடற்கரையில் கரையொதிங்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சாரதி அனுமதிப்பத்திரம் மருதங்கேணி பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையா நாட்களாக வடமராட்சி கிழக்குப்பகுதிகளில் சடலங்கள் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிவரும்நிலையில், இந்த நபருக்கு என்ன நடந்தது? இந்த சாரதி அனுமதிப்பத்திரம் எப்படி இங்குவந்து கரையோதிங்கியது? கடலில் ஏதேனும் அனர்த்தத்தில் பலியாகினாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
குறித்த சாரதி அனுமதிப்பத்திரத்தில் அவருடைய முகவரி காலம்பாடி, சிதம்பரம், Kalampadi po, Chidambaram taluk , Chidambaram cuddalcre tn 606602 என குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையா நாட்களில் வடமராட்சி கிழக்குப்பகுதிகளில் 6க்கு மேற்ப்பட்ட சடலங்கள் உருக்குலைந்த நிலையில் கரையொதிங்கியமை குறிப்பிடத்தக்கது.