வவுனியாவிலிருந்து முல்லைத்தீவுக்குச் சென்று கடலில் நீராட முற்பட்டபோது கடலில் மூழ்கிய இளைஞர்கள் மூவரும் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை இளைஞர்கள் மூவரும் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவரின் சடலம் நேற்று மாலை உடனடியாகவே மீட்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் தொடராக தீர்த்தக்கரைப் பகுதியில் மற்றொரு இளைஞரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டிருந்தது.
தற்போது முல்லைத்தீவின் அளம்பில் கடற்பரப்பில் சடலம் மிதந்த நிலையில் படகில் தேடுதல் நடத்தியவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அது மீட்கப்பட்டுள்ளது.சடலத்தை கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கை இடம்பெற்றுவருவதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இறுதியாக மீட்கப்பட்டவர் தோணிக்கல், வவுனியா என்ற முகவரியைச் சேர்ந்த விஜயகுமாரன் தர்சன் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா