கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஏதுவாக செயற்படும் சூயிங்கத்தை தயாரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் மனிதர்களின் உமிழ்நீர் சுரப்பிகளில் அதிகளவில் உருப்பெறுகிறது. இவ்வாறு பெருகும் கொரோனா வைரஸ் தும்மல், இருமல் அல்லது பேசும்போது வெளியேறி மற்றவர்களுக்குப் பரவுகிறது.
இந்நிலையில் நாங்கள் கண்டுபிடித்துள்ள சுயிங்கத்தின் மூலம் கொரோனா வைரஸ் உருவாகும் இடத்திலேயே அழிக்கப்படும். அதன் பரவலும் தடுக்கப்படும் என அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஹென்றி டேனியல் தெரிவித்துள்ளார்.
இந்தச் சுயிங்கம் தயாரிப்புக்கு தாவரத்திலிருந்து பெறப்படும் ‘ACE2’ என்ற புரதம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, கொரோனா நோயாளிகளின் உமிழ் நீர் மாதிரியில் இதை பரிசோதித்த போது நல்ல பலனை கொடுத்திருக்கிறது எனவும் அவர் கூறினார்.
அடுத்தகட்டமாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த புரதம் அடங்கிய சூயிங்கத்தைக் கொடுப்பது பாதுகாப்பானதாகவும், செயற்றிறன் கொண்டதாகவும் இருக்குமா? என்று அறிவதற்கான முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். அதற்கான அனுமதி பெறும் முனைப்பில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா