தமிழ்நாடு - நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே இடம்பெற்ற இராணுவ ஹெலிகப்டர் விபத்தில் சிக்கிய இந்திய முப்படை தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெனரல் பிபின் ராவத் நீலகிரி மாவட்டம் -வெலிங்டனில் உள்ள இராணுவ மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேவேளை, தலைமைத் தளபதி உட்பட 14 பேருடன் பயணித்த இந்திய இராணுவ ஹெலிகப்டரில் பயணித்தவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ஜெனரல் பிபின் ராவத் உள்ளிட்ட மூவரும் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
பிபின் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற இராணுவ ஹெலிகாப்டரே இன்று விபத்துக்குள்ளானது.
இதேவேளை, இந்த விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை ருவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.