தமிழகத்தில் இடம்பெற்ற இராணுவ ஹெலிகப்டர் விபத்துக்குள்ளானதில் இந்திய முப்படை தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் காயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக லெப்டினன்ட் ஜெனரல் எச்.எஸ். பனாக் (Lt Gen H S Panag) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜெனரல் பிபின் ராவத் ஆத்மா சாந்தி பெறட்டும் என அவர் தனது ருவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவரது இந்தப் பதிவுக்கு கடும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஜெனரல் பிபின் ராவத் உயிரிழந்தமை உத்தியோகபூா்வமாக உறுதிப்படுத்தப்படாத நிலையில் இந்தப் பதிவை நீக்குமாறு பலர் சமூக ஊடகங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.