முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேறியது.
கரைதுறைபற்று பிரதேச சபை மண்டபத்தில் குறித்த நிகழ்வு தவிசாளர் தலைமையில் இன்று நடைபெற்றுள்ளது.
முன்னதாக தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் வரவு - செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றினார்.
அதன் பின்னர் வாக்கெடுப்பு நடைபெற்றது.
உறுப்பினர்கள் 24 பேர் அங்கம் பெறும் குறித்த சபையின் இன்றைய அமர்வில் உறுப்பினர்கள் 04 பேர் சமூகமளிக்கவில்லை.
நடைபெற்ற வாக்கெடுப்பின் போது உறுப்பினர்கள் 29 பேர் சமூகமளித்திருந்த நிலையில் அனைவரும் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
இதனால் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேறியது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு