Wednesday 24th of April 2024 05:36:48 PM GMT

LANGUAGE - TAMIL
-
சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த கன்ரர் வாகனம் வடமராட்சியில் விபத்து!

சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த கன்ரர் வாகனம் வடமராட்சியில் விபத்து!


யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுரக்குறிச்சிப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்ததாகத் தெரிவிக்கப்படும் கன்ரர் வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினர் குறித்த வாகனத்தை நிறுத்தியபோது வாகனத்தை நிறுத்தாது சாரதி செலுத்திச் சென்றதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

அதன் பின்னரேயே சிறப்பு அதிரடிப்படையிர் துரத்திச் சென்றபோது வீதி வளைவில் வாகனத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் விபத்து நிகழ்ந்துள்ளது.

இதன்போது வீதியோரத்தில் காணப்பட்ட தொலைபேசிக் கம்பங்களும் உடைந்திருக்கின்றன.

வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணித்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியிருப்பதாக தெரியவருகிறது.

குறித்த பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினரும், பொலிஸாரும் நிலைகொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், கரவெட்டி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE