முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு 1.5மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் சிறுவர் வறுமை நிவாரண நிதியத்தால் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்த உபகரணங்கள் வைத்தியசாலைச் சூழலில் நோய்க்கிருமிகள் பரவுவதை தடுப்பதுடன் வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வைத்திய சேவையை விரைவுபடுத்தும் தொழிற்பாட்டையும் மேம்படுத்தும் என்று வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
எமது மாவட்டத்தில் சிறப்பான மருத்துவத்தை மக்கள் பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு சிறுவர் வறுமை நிவாரண நிதியத்தால் வழங்கப்பட்டது.
கல்கட் சில்றன்ஸ் சேவிஸ், வண் கைன்ட் அட் ஆகிய நிறுவனங்கள் குறித்த பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அனுசரணை வழங்கியுள்ளன.
Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், முல்லைத்தீவு