ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான அமைப்பாளராக லக்சயன் முத்துக்குமாரசாமி இன்று நியமணம் பெற்றுக்கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான அமைப்பாளராக எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச அவர்களால் இன்று லக்சயன் முத்துக்குமாரசாமி நியமிக்கப்பட்டார்.
இவ்வாறு நியமிக்கப்பட்ட லக்சயன் முத்துக்குமாரசாமி அவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் ஐக்கிய இளைஞர் சக்தியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயந்த திஸாநாயக்க,பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன. ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமா சந்திர பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு