Friday 19th of April 2024 09:13:25 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஒமிக்ரோனால் முதல் மரணம் அமெரிக்காவில் பதிவானது!

ஒமிக்ரோனால் முதல் மரணம் அமெரிக்காவில் பதிவானது!


அமெரிக்காவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். நாட்டில் பதிவான முதல் ஒமிக்ரோனுடன் தொடர்புடைய மரணமாக இது பதிவாகியுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் உயிரிழந்த நபர், இதுவரை எந்தவொரு தடுப்பூசியும் போட்டுக் கொள்ளாதவர் என மாகாண சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட 60 வயதுடையவர். தடுப்பூசி போடப்படாததால் இவர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு கடுமையான சிக்கல்களுக்கு முகம் கொடுத்ததாக பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 18 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஒரு வாரத்திற்கான தரவுகளின் அடிப்படையில் அமெரிக்காவில் உறுதி செய்யப்பட்ட தொற்று நோயளர்களில் 73 வீதமானவர்கள் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதாக அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டவர்களிடையே உலகின் முதல் மரணம் கடந்த வாரம் இங்கிலந்தில் பதிவானது. தற்போது ஒமிக்ரோனுடன் தொடர்புடைய மரணங்கள் இங்கிலாந்தில் 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இத்திரிபால் பாதிக்கப்பட்ட 104 பேர் தற்போது மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ளதாக இங்கிலாந்து துணைப் பிரதமர் டொமினிக் ராப் நேற்று திங்களன்று ரைம்ஸ் ரேடியோவிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE