Friday 29th of March 2024 02:29:09 AM GMT

LANGUAGE - TAMIL
-
மன்னாரில் மெசிடோ நிறுவனத்தினால் உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு!

மன்னாரில் மெசிடோ நிறுவனத்தினால் உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு!


மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் (மெசிடோ) உலருணவு பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

வடமாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 2000 மீனவ குடும்பங்களிற்கு குறித்த உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்படுகிறது.

18 கிலோ எடை கொண்ட பொதியில் அரிசி, மா, சீனி, தேயிலை, பருப்பு அடங்கிய உணவு பொதி தலா 1600 ரூபா பெறுமதியானது என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய தினம் கிளிநொச்சி பள்ளிக்குடா பகுதியில் 50 குடும்பங்களிற்கு குறித்த உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

பிரதேச செயலகம் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளிற்கு குறித்த உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE