இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் - லூதியானாவில் உள்ள நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் 2 பேர் பலியாகினர். மேலும் வழக்கறிஞர் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
லூதியானாவில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள கழிவறையில் இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் எட்டு நீதிமன்ற அறைகள் உள்ளன. அப்பகுதியை பொலிஸார் சுற்றி வளைத்து தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.
இந்த வெடிப்புச் சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா? அல்லது இதற்கு காரணம் என்ன என கண்டறிவதற்கான விசாரணைகளை நடத்தி வருவதாக பஞ்சாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.