முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மூங்கிலாறுப் பகுதியில் சிறுமி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் சம்பவ இடத்தினைப் பார்வையிடுவதற்காக முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா சம்பவ இடத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
காணாமல் போன சிறுமி தேடப்பட்டு வந்த நிலையில் தேடிய இடத்தில் சிறுமியின் சடலம் காணப்பட்ட நிலையில் சிறுமி முதலில் நீர் நிலை ஒன்றில் போடப்பட்டு பின்ரேயே காணப்பட்ட இடத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.
மரணம் தொடர்பிலான மருத்துவ அறிக்கை வெளியாகியிருந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவரும் கைதாகியிருந்தார்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற நீதிபதி அங்கு காணப்படும் சந்தேகத்திற்கிடமான கிணறு ஒன்றை பார்வையிட்டதுடன் அங்குள்ள மக்களிடமும் விசாரணை நடத்திவருகின்றார் என்று சம்பவ இடத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், முல்லைத்தீவு