புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் இலங்கையின் 20வது பிராந்திய காரியாலயம் இன்று(23) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
பிராந்திய காரியாலயத்தினை சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு வளங்கள் அமைச்சகம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் பணிப்பாளர் அனுற வலப்பொல மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் ஆகியோர் இணைந்து நாடாவினை வெட்டி வைபக ரீதியாக திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி, குறித்த திணைக்கள அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு