ஒமிக்ரோன் தொற்று நோய் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் உலகெங்கும் விமான சேவைகள் மீண்டும் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதுடன், விமானப் பயணிகளும் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
அமெரிக்காவில் நேற்று வெள்ளிக்கிழமை ஒரு நாளில் மட்டும் திட்டமிடப்பட்ட 210 விமான சேவைகள் திடீரென இரத்துச் செய்யப்பட்டன.
சிகாகோவை தளமாகக் கொண்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் நேற்று வெள்ளிக்கிழமை 120 விமானங்களை இரத்து செய்துள்ளது. அதே நேரத்தில் அட்லாண்டாவை தளமாகக் கொண்ட டெல்டா ஏர்லைன்ஸ் சுமார் 90 விமானங்களை இரத்து செய்ததாகக் கூறியது.
எனினும் முன்பதிவு செய்த பயணிகள் விமான நிலையங்களில் சிக்கித் தவிப்பதை தவிர்க்கும் வகையில் பயணிகளுடன் தொடர்புகொண்டு அவா்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருவதாக இரு விமான சேவை நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
ஒமிக்ரோன் தீவிர பரவல் எங்கள் விமான நிறுவன பணியாளர்கள் மத்தியில் தீவிர நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக விமானங்களை நாங்கள் இரத்து செய்ய வேண்டியிருந்தது. இதனால் பாதிக்கப்படக்கூடிய பயணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறோம் என யுனைடெட் ஏர்லைன்ஸ் மற்றும் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா