ஜேர்மனியின் ஜனாதிபதியாக பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர் இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜேர்மன் ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் கூட்டத் தொடர் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர் தேர்வு செய்யப்பட்டார்.
ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் பேசிய பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர், ஜனநாயகத்திற்காக போராடுபவர்களுக்கு பக்கத்தில் நான் இருப்பேன் எனத் தெரிவித்தார்.
உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்து வருவது உக்ரைனுக்கு ஆபத்து. அங்குள்ள மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான உரிமை உள்ளது. அதனை அழிக்க எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை எனவும் அவா் குறிப்பிட்டார்.