தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கல்விக்கழகத்தின் முல்லைத்தீவு மாவட்டப் பொறுப்பாளராக செயற்பட்டிருந்த அன்பு என்று அழைக்கப்பட்ட கந்தசாமி நாகேந்திரராசா காலமாகியுள்ளார்.
விடுதலைப்புலிகள் செயற்பட்ட காலப் பகுதியிலேயே நரம்பு சார்ந்த நோய்த் தாக்கத்துக்கு உட்பட்டிருந்த அவர் நீண்ட காலமாக நோய்ப்பாதிப்பினை எதிர்கொண்டுவந்திருந்தார் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் காலமானதாகவும் அவருடைய இறுதி நிகழ்வுகள் நேற்று புதுக்குடியிருப்பில் உள்ள அவருடைய இல்லத்தில் நடைபெற்றிருப்பதாகவும் புதுக்குடியிருப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு