Thursday 28th of March 2024 03:22:59 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழிலிருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட 16 பேர் உட்பட வடக்கில் 28 பேருக்கு கொரோனா!

யாழிலிருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட 16 பேர் உட்பட வடக்கில் 28 பேருக்கு கொரோனா!


யாழ்ப்பாணத்திலிருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட 16 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 28 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர்பரிசோதனையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டவர்களில் 20 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்ப்பட்டுள்ளது.

அவர்களில் வெளிநாடு செல்வதற்காக (Passport) அனுமதி பெறுவதற்காக தம்மை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டவர்கள் 28 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்ய்ப்பட்டுள்ளது.

அவற்றின் அடிப்படையில்,

யாழ்.போதனா வைத்தியசாலையில் 20 பேர் (Passport – 16 பேர்)

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை 03 பேர்,

முழங்காவில் இலங்கை விமானப்படை முகாமில் ஒருவர் என்ற அடிப்படையில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE