ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனுக்கான சிறைவிடுப்பு காலத்தை மேலும் ஒரு மாதம் நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவரது தொடர் சிகிச்சைக்காக மேலும் ஒரு மாதம் சிறைவிடுப்பு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காகவே அவருக்கு சிறைவிடுப்பு வழங்கப்பட்டது.
அவருக்கு வழங்கப்பட்ட சிறைவிடுப்பு காலம் பெப்ரவரி மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், அதனை மேலும் ஒரு மாதம் நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், பேரறிவாளனுக்கு 10-ஆவது முறையாக சிறைவிடுப்பு காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
பேரறிவாளனின் உடல் நிலை மற்றும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு நீண்ட விடுப்பு வழங்க வேண்டும் என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கடந்த 2021 மே 18 ஆம் திகதி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.