மருதானை பகுதியில் காவல்துறை குடியிருப்பு கட்டடத் தொகுதியின், 9 ஆவது தளத்தில் இருந்து வீழ்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
70 வயதான குறித்த நபர், அங்கு சுத்திகரிப்பு ஊழியராக பணியாற்றி வந்தவரென காவல்துறை தெரிவித்துள்ளது.
கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.