Thursday 25th of April 2024 11:24:17 AM GMT

LANGUAGE - TAMIL
.
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!


வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்றைய தினம் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை நிலவரம் தொடர்பில் வளிடண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவதான அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

அனுராதபுரம் - அடிக்கடி மழை பெய்யும்

மட்டக்களப்பு - அவ்வப்போது மழை பெய்யும்

கொழும்பு - பி.ப.2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

காலி - பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

யாழ்ப்பாணம் - சிறிதளவில் மழை பெய்யும்

கண்டி - பி.ப.4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

நுவரெலியா - சிறிதளவில் மழை பெய்யும்

இரத்தினபுரி - பிரதானமாக சீரான வானிலை

திருகோணமலை - அடிக்கடி மழை பெய்யும்

மன்னார் - பி.ப.4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், மட்டக்களப்பு, கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE