உயர்தரப் பரீட்சையில், சில பரீட்சை வினாத்தாள்களில் இடம்பெற்ற சில பிழைகள் தமிழ் மொழிமூல மாணவர்களையும் பாதித்துள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 7ஆம் திகதி நடைபெற்ற கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை உயிரியல் வினாத்தாள் பகுதி 01 இல் பல தவறுகள் விடப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில், பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் சந்தர்ப்பத்தை பல மாணவர்களும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த விவகாரத்தில் கல்வியமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை விடுத்தார்.