இலங்கையின் நிதிநெருக்கடியை தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், ரொய்ட்டர்ஸுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்நிமித்தம் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள இந்தியா எதிர்பார்த்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும், நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
அவர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர், நிதி அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.