தொழிற்சங்க நடவடிக்கையைக் கைவிடுமாறு அரச தாதியர் சங்கத்திற்கும் அதன் தலைவர் சமன் ரத்னப்பிரியாவுக்கும் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை உத்தரவு மார்ச் 11 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால், இந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்ததையடுத்து கொழும்பு மாவட்ட நீதிவான் அருண அளுத்கே இந்த இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.