ஜனாதிபதியின் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கைக்கு அமைவாக பொதுமக்களை மையமாகக்கொண்ட பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் ஒட்டுசுட்டானில் புனரமைப்பு செய்யப்பட்ட விதாதா வள நிலையம் இன்று(25) காலை 8.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள், மரப்பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த கட்டடத்தினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமாகிய காதர் மஸ்தான் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்துவைத்ததைத் தொடர்ந்து நாடாவை வெட்டி குறித்த கட்டடத்தை திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள், மரப்பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி ஜே.கிருஸ்ணமூர்த்தி, மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி எம்.வில்வராஜ், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ப.ஜெயராணி, விதாதா வள நிலைய பணிப்பாளர் ஏ.எம் ஆரிப், முல்லைத்தீவு மாவட்ட விதாதா வள நிலைய உதவிப்பணிப்பாளர், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் விதாதா வள நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, முல்லைத்தீவு