திங்கட்கிழமை முதல் மீண்டும் மின்சார துண்டிப்பை நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்றும், நாளையும் இரவு வேளைகளில் மின்சார துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்று அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பகல்வேளையில் ஏ.பி மற்றும் சி வலயங்களில் 3 மணித்தியாலயங்களும், ஏனைய வலயங்களில் 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.